×

தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள்: கோவை சரக டிஐஜி தகவல்

நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கியிருந்த தொழிலாளர்களின் குடிசைகளுக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். தொழிலாளர்கள் குடிசைக்கு தீவைத்து தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள்: கோவை சரக டிஐஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Goai Sarraca ,Namakkal Jedarbayam ,Gov ,Sarraka ,Goai Sarraka ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்